Showing posts with label இரத்த தானம். Show all posts
Showing posts with label இரத்த தானம். Show all posts

Jun 14, 2012

உயிர் காக்க உதவுங்களேன் -ப்ப்ப்ப்பப்ப்ப்பப்ப்ளீஸ்




இன்று உலக ரத்த தான நாள் ""EVERY BLOOD DONOR IS A HERO "".இந்த நாள் ரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாகவும் ,அவர்களின் விலைமதிப்பற்ற இந்த சேவையை நினைவுகூரும்  தினமாகவும் ,2005 ம் வருடம் ஜூன் மாதம் 14 ம் தேதி முதல் அனுஷ்டிக்க படுகிறது .


இந்நாள் நோபல் பரிசு பெற்றவரும் ,ஏபிஓ ரத்த தான அமைப்பை நிறுவியரும் ,மதிப்பிற்குரிய  "" கார்ல்  லாண்ட்ஸ்டெய்னர்   "" அவர்களின் பிறந்த நாள் அன்று கொண்டாடபடுகிறது .

ரத்த தானம் செய்வோர் எல்லோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

நமது உடலில் சராசரியாக  5முதல் 6 லிட்டர் வரை உள்ளது .ரத்த தானத்தில் நாம்  200 மி  முதல் 300 மி வரை கொடுக்கலாம் .நாம் குறைந்த பட்சம் 3 மாதங்கள் இடைவெளியில் ரத்த தானம் வழங்கலாம் .

நாளுக்கு நாள் அவசர சிகிச்சைகளும் ,விபத்துகளும் ,பெருகி விட்டன .ஆகவே ரத்த தானம் தேவைபடுவோரின் எண்ணிகையும் அதிகமாகிவிட்டது .

நமது ரத்தம் மிகுந்த விலைமதிப்பற்றது .பிறருடைய உயிர் காக்க உதவலாம் .

 ரத்த தானம் செய்வோர் ஆண் ,பெண் ,இருவரும் தரலாம் .

50  கிலோவிற்கு மேல் எடை உள்ளவர் கொடுக்கலாம் .

ஹீமோக்ளோபின் 12 முதல் 15 வரை உள்ளவர் தரலாம் .

தொடர்ந்து மருத்துவ சேவை பெறுவோர் மருந்து  உண்போர் தரகூடாது .

குறிப்பாக மது அருந்துவோர் 48 மணி நேரத்திற்கு பிறகே தரவேண்டும் .

ரத்த தானம் செய்வோருக்கு சில ஆலோசனைகள் 

ரத்த தானம் செய்வதற்கு 2  மணி நேரத்திற்கு முன் நல்ல உணவு எடுத்துகொள்ளுங்கள் .

ரத்த தானம் செய்வதற்கு முன் புகைத்தல் வேண்டாம் .புகைபிடிப்போர் 3  மணி நேரத்திற்கு பின் புகைக்கலாம் .

ரத்த தானம் செய்ய கண்டிப்பாக 3 மாத இடைவெளி எடுத்துகொள்ளவும் .

ரத்த தானம் செய்தவுடன் உடனே வாகனம் ஊட்டுவதை தவிர்க்கவும் .

மது அருந்துவோர் 24 மணி நேரத்திற்கு பிறகு அருந்தலாம் .  

பழ ஜூஸ் அல்லது தண்ணீர் அதிகம் அருந்தவும் .

                           

ரத்த தானம் பற்றிய சில பொதுவான கேள்விகளும் ,சந்தேகங்களும் ?

1 .ரத்த தானம் செய்வதால் ,அங்கு பயன்படுத்தும் ஊசியால் ,அல்லது மருத்துவமனையில் இருந்து ஏதாவது தொற்று நோய்  வருமா ?

இல்லை  .உங்களுக்காக  மிக்க பாதுகாக்கபட்ட ஊசி தான் பயன்படுத்துவார்கள் .உங்களுக்கு ஏதும் தொற்று நோய் வராது .

2 . ரத்த தானம் செய்யும் பொழுது வலிக்குமா? 

இல்லை வலிக்காது .ஊசி குத்தும் பொது மிக சிறிய வலி இருக்கும் அவ்வளவு தான் .

3 .ரத்த தானம் செய்தவுடன் நான் எனது வேலைகளை தொடரமுடியுமா அல்லது ஓரிரு நாள் ஓய்வெடுக்க வேண்டுமா ?

தாரளமாக உங்கள் வேலைகளை தொடரலாம் .ஓரிரு நாள் ஓய்வெடுக்க வேண்டியது இல்லை .

4 . ரத்த தானம் செய்வதால் என் உடல் நிலை பாதிக்கப்படுமா ?

இல்லை .பதிக்கபடாது .

5 . என்னிடமே கொஞ்சம் ரத்தம் தான் உள்ளது ?

நம் உடலில் ரத்தம்   5முதல் 6 லிட்டர் வரை உள்ளது.நம்மிடமிருந்து 200 மி  முதல் 300 மி வரை மட்டுமே எடுப்பார்கள் .

6 .ரத்த தானம் செய்ய எனக்கு பயமாக  உள்ளது ?

பயப்பட தேவை இல்லை .உலகில் தினமும் பல நூறு பேர் ரத்த தானம்  செய்கிறார்கள் .

7 . ரத்த தானம் செய்வது என் கடமையா ?இதனால் எனக்கு என்ன பயன் ?

அவசியம், ரத்த தானம் செய்வது ஒவ்வொருவரின் கடமையாகும் .ரத்த தானம் செய்வதால் நாம் பிறருக்கு உதவும் 
திருப்தியும் ,மன சந்தோசமும் கிடைக்கும் .நம் வீட்டில் யாருக்காவது ரத்த தானம் தேவைபட்டால் நாமும் வெளியே பிறரிடம் இருந்து தான் வாங்க வேண்டும் .

8 .ரத்த தானம்  செய்வதற்கு நீண்ட நீரம் ஆகுமா ?

இல்லை .10  நிமிடம் மட்டுமே ஆகும் .

9 சர்க்கரை நோய் உள்ளவர்கள் ,பிரசவித்து உள்ளோர் ,வேறு பெரிய நோய் உள்ளவர்கள் ரத்த தானம் தரலாமா ?

இவர்கள் கண்டிப்பாக ரத்த தானம் தர கூடாது ..

10 .உலகில் இத்தனை பேர் இருக்கும் பொழுது என் ரத்தம் அவசியமா ?

ஆம் .மிக அவசியம் ரத்தம் அதிக அளவில் தேவைபடுகிறது ஆகவே உலகில் ரத்த ரத்த தானம் செய்வோர் மிக அதிக அளவில் தேவைபடுகிறார்கள் .

ரத்த தானம் செய்வோம் .பிறர் உயிர் காப்போம் 

ரத்த தானம் செய்வது ஒவ்வொருவரின் கடமை என இந்நாள் உறுதி மொழி ஏற்ப்போம் .

""நான் ரத்த தானத்தின் பெருமை அறிந்து கொண்டேன் .நான் பிறருக்கு உதவும் 

பொருட்டு ரத்த தானம் செய்வேன்.என உறுதிமொழி ஏற்கிறேன் . ""