Showing posts with label சமூக சேவை. Show all posts
Showing posts with label சமூக சேவை. Show all posts

Jun 21, 2013

மாணவ நட்சத்திரங்களுக்கு தீப அஞ்சலி



ஈர நெஞ்சம் அமைப்பு சார்பாக இன்று கோவையில் விளாங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள அரசு உயர் நிலை பள்ளியில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி .கீதா அவர்கள் தலைமையில் ஈர நெஞ்சம் அமைப்பின்அறங்காவலர்  திரு.மகேந்திரன் மற்றும் ஈர நெஞ்சம் அமைப்பினர் திரு.கோவை சக்தி மற்றும் திருமதி .பூர்ணிமா ஆகியோர் கலந்து கொண்டனர் .


 அப்பள்ளி மாணவர்களுக்கு ஈர நெஞ்சம் அமைப்பு சார்பாக தன்னம்பிக்கை மற்றும் சுய ஊக்குவிப்பு வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது .








விழாவில் 19.06.13 அன்று  கோர விபத்தில் பலியான புதுக்கோட்டை, வல்லந்திராக்கோட்டை அரசு பள்ளியை சேர்ந்த 7 மாணவர்களுக்கு இரங்கலும் ,தீபம் ஏந்தி கண்ணீர் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது . மேலும் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு , மற்றும் வாகன விபத்துக்கள் தொடர்பாகவும் ,வீட்டில் இருந்து வரும் மாணவர்கள் பள்ளிக்கு சற்று முன்னதாக கிளம்பி பாதுகாப்புடன் வந்து செல்ல அறிவுரைகள் வழங்கப்பட்டன.

                      

                      
                       
அதனை தொடர்ந்து அப்பள்ளியில் 10 ம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற N.கோகிலா (453) , இரண்டாம் மதிப்பெண் பெற்ற R. அருண்குமார் (438) அவர்களுக்கு பாராட்டுக்களும் ,பரிசுகளும் ஆசிரியர்கள் சார்பாக வழங்கப்பட்டன .

                       

                       

மேலும் அப்பள்ளி துவங்கப்பட்டு முதலாம் ஆண்டுலே 10 ம் வகுப்பு தேர்வில் 100 % தேர்ச்சிக்கும், மாணவர்களின் உயர்வுக்கும் அர்பணிப்புடன் பாடுபட்ட தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர்களுக்கு ஈர நெஞ்சம் சார்பாக வாழ்த்துக்களும் ,நன்றிகளும் தெரிவிக்கப்பட்டன .


Apr 28, 2013

சத்தமின்றி ஒரு சமூக சீர்திருத்தம்--ஈர நெஞ்சம்




சத்தம் இல்லாமல் ஒரு புரட்சி செய்து வரும் ஈர நெஞ்சம் அமைப்பும் ,அதன் நிறுவனரான ஈர நெஞ்சம் மகி எனும் மகேந்திரன் அவர்களை வாழ்த்துவோம் .

இன்று முதலாம் ஆண்டு நிறைவடைந்து ,இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈர நெஞ்சம் அமைப்பிற்கு வாழ்த்துக்கள் ,

இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை கோவை மாநகராட்சி காப்பகத்தில் எல்லோர்க்கும் தலை முடி வெட்டியும் ,நகங்கள் வெட்டியும் ,அவர்களை சுத்தபடுத்தியும் ,காப்பத்தில் உள்ள சுமார் 100 பேருக்கும் அறுசுவை உணவளித்தும் ,மர கன்றுகளை நட்டும் விழாவை கொண்டாடினர் .


இரண்டாம் ஆண்டு துவக்க விழாவின் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக !












கடமையை செய்பவர்கள் கடமையை செய்தால் உலகில் யாரும் ஆதரவற்றோராக இருக்கமாட்டார்கள் .

அங்கு உள்ள எல்லோரும் வாழ்வில் நல்ல நிலையில் இருந்து காலத்தின் (சில மனிதர்களின் சுயநலத்தால் ) கட்டாயத்தால் இது போன்ற காப்பகத்தில் தன்  வாழ் நாட்களை கடத்திகொண்டுள்ளனர் .

ஈர நெஞ்சம் போன்ற நெஞ்கில் ஈரம் சுமக்கும் சிலரால் தான் இவர்கள் உயிர் வாழ்கிறார்கள் என்றால் அது மிகை அல்ல .ஈர நெஞ்சத்தின் ஈரமான செயல்கள் அநேகம் அதில் சில, சாலைகளில் பைத்தியங்களாக, சக சமூகத்தினரால் ஒதுக்கபட்டோரை காப்பகங்களில் சேர்த்துள்ளனர் .திரு நங்கைகளின் வாழ்வில் சுய தொழில் தொடங்கி சுய மரியாதையுடன் வாழ உதவி செய்துள்ளனர் .பல ஆதரவற்ற உடல் நலமின்றி இருந்த முதியோரை  மருத்துவனைகளில் சிகிச்சை பெற உதவி உள்ளனர் .பலருக்கு கல்வி மேற்கொள்ள கல்வி உதவி வழங்கி வாழ்வில் கல்வி விளக்கேற்றி உள்ளனர் ,இது போன்ற பல சாதனைகளை அடுக்கிகொண்டே செல்லலாம் .

இன்று ஈர நெஞ்சம் நிறுவனர் திரு .ஈர நெஞ்சம் மகி அவர்களை கௌரவித்து நேசம் அமைப்பு விருது வழங்கி உள்ளது .

                                          http://eerammagi.blogspot.in/



வாழ்க ! ஈர நெஞ்சம் மகி மற்றும் அமைப்பினர் ! தொடர்க உங்கள் சமூக சேவைகள் !


Dec 4, 2012

மனநிலை பாதித்த இளம் பெண்ணிடமுமா வக்கிரம்??????



நண்பர்களே , எங்கே செல்கிறது இன்றைய நம் சமுதாயம் ஏன் இவ்வளவு கேவலமான எண்ணங்களும் ,கேவலமான மனநிலைகளும் உள்ளது நம் மனித சமுதாயத்தில் ??????

நேற்று நடந்த ஒரு உண்மை சம்பவம் மிகவும் மனதை நெருடுவதாகவும் ,மனித சமுதாயத்தின் மேல் கோபமும் பட வைத்துவிட்டது .மிருகங்களுக்கு உள்ள மனிதாபமும் இல்லாமல் ,இந்த சமுதாயம் மிருகத்தை விட கேவலமான திகழ்கிறது .

நேற்று நடந்த ஒரு சம்பவம் பற்றி உங்களுடன் பகிர்கிறேன் !


அழகிய மரங்களும் ,பூக்களும் ,வயல்களும் நிறைந்த கிராமத்தின் மையத்தில் உள்ள ஒரு சாலை ஓரத்தில் ஒரு இளம் பெண் சற்று மன நிலை பாதித்த நிலையில் மரத்தின் அடியில் தன்  உடலில் ஒரு ஒட்டு துணி கூட இல்லாத நிலையில் ,தன் உடலில் துணி இல்லை என்ற உணர்வும் அற்ற  நிலையில் நிர்வாணமாக அமர்ந்துள்ளார் .

                                        

அந்த இளம் பெண்ணை சுற்றி காமுகர்கள் கூட்டம் அருகில் நின்று ரசித்துக்கொண்டும் ,கண்களால் ருசித்துகொண்டும் ,,ஏன் சிலர் தன் கைப்பேசியில் புகைப்படம் கூட எடுத்துக்கொண்டும் உள்ளனர் .

அருகில் உள்ள வீட்டினரோ " நமக்கேன் " என்றும், எனக்கு என்ன தேவை ? என்ற நிலையில் தன்  வேலைகளில் மும்முரமாக ஈடுபடுகின்றனர் .

அந்த அப்பாவி பெண்ணோ சமுதாயத்தினர் யாரும் உதவி செய்யாத நிலையில் அந்த நிர்வாண அபலை பெண் கூடி நின்று  வேடிக்கை பார்ப்பவர்களை கண்டு திரு திரு வென முழித்து கொண்டுள்ளாள் ,,,.தெய்வமே !

இந்நிலையில் அந்த சாலை வழியாக இரு இளைஞர்கள் அவர்கள் வாகனத்தில் கடக்கிறார்கள் .அந்த கூட்டத்தை கண்டு   நின்ற இருவரும் அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்த இருவரும் அந்த இளம் பெண்ணின் அவல நிலையை கண்டு திகைப்பும் ,பதறி துடித்து போகிறார்கள் .



உடனே அங்கு கூடி நின்று வேடிக்கை பார்த்த அனைவரையும் திட்டி துரத்தி விட்டு அருகில் உள்ள வீட்டினரிடம் அப்பெண்ணை பற்றி விசாரிகின்றனர் .அப்போது ,அந்த இளம் பெண்  அந்த பகுதியிலேயே வசிப்பவர் என்றும் மன நிலை பாதித்த நிலையில் உள்ளார் என்பதை அறிந்து கொள்கின்றனர் .

உடனே அருகில் உள்ள ஒரு வீட்டில் உள்ள பெண்ணிடம் உடைகளை வாங்கி அந்த பெண்ணின் மானம் காத்து அப்பெண்ணின் வீட்டில் விட்டு விட்டு அந்த பெண்  வீட்டாரிடம் அறிவுரையும் கூறிவிட்டு மன நிறைவுடன் நகர்கிறார்கள் .

அந்த பெண்ணின் மானம் காத்த நண்பர்களில் ஒருவர் திரு .அருண்குமார் ,மற்றோரு நண்பர்  திரு .மகி.மகேந்திரன்  .நமது நண்பர்கள் இருவரும் இந்த சம்பவம் பற்றியோ ,பெயரோ எழுத வேண்டாம் என வேண்டிகொண்டனர் . ஒரு விழிப்புணர்வுக்காகவே உங்களுடன் இந்த பகிர்வை பகிர்கிறேன் .



சமுதாயத்திற்கு முன் மாதிரியாக திகழம் இந்த  இளைஞர்களை நாம் மனதார வாழ்த்துவோம் !

நண்பர்களே ,இது போன்ற சம்பவங்களை பார்ப்பவர்கள் ,நமக்கேன் என்று வேடிக்கை பார்க்காமல் உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள் !



பெண் என்பவள் தெய்வம் ! நம்மை ஈன்றவரும் பெண் தான் ! நம் உடன் பிறந்த சகோதரியும் பெண் தான் !

                                  

பிறகு ஏன் சமுதாயமே ! நம் மனித சமுதாயத்தில் பிறந்த சக பெண்ணிடம் இவ்வளவு வக்கிரம் !


அந்த இளம் பெண்ணின் வருங்காலத்தை கருதி அந்த இடத்தையோ ,அந்த பெண்ணை பற்றியோ நான் எழுதவில்லை .




Nov 17, 2012

மடிந்ததோ மனித நேயம் ?



                             

மடிந்ததோ மனித நேயம் ?

கை கொடுத்த ஈர நெஞ்சம் அமைப்பு 

மனிதனை சக மனிதனாய் பார்க்கும் நிலை மாறி வருகிறது .மனிதனிடம் பணம் இல்லாவிட்டால் அவன் குப்பைக்கு சமமோ ?

உயிர் காக்கும் மருத்துவர்களே உங்களை தெய்வமாக பார்க்கிறோம் நாங்கள் .அரசு மருத்துவமனைகளில் பணமற்ற ஏழை மற்றும் நடுத்தர மக்களே சிகிச்சைக்கு வருகிறார்கள் .தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து லட்ச கணக்கில் பணம் செலவு செய்ய இயலாத நிலையில் அரசு மருத்துவமனைகளை தேடி  சிகிச்சை பெற வருகிறார்கள் மக்கள் .

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும்  சில மருத்துவர்கள் தன்னிடம் தனியாக பார்க்கும் நோயாளிகளுக்கும்  , அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் பாரபட்சம் பார்ப்பதாகவும் , மக்களிடையே பரவலான கருத்து நிலவுகிறது .

ஏன் இந்த பாகுபாடு ? ஏன் இந்த தராதர வித்தியாசம் ? ஏன் இந்த பிரிவினை ? பணம் படைத்தவன் மட்டுமே மனிதனா ?

இந்நிலை முற்றிலும் அகற்றப்படவேண்டும் .

கோவையில் இன்று நடந்த ஒரு சம்பவம் :

கோவை அரசு மருத்துவமனையில் இரண்டு சிறுநீரகமும் இழந்த நிலையில் சிகிச்சை பெற்ற ஆந்திர மாநிலத்தை சேர்ந்த திரு . தீரன் சிங் என்ற நோயாளி ஆதரவு யாருமற்ற நிலையில் மனிதாபம் இல்லாமல்  தனது மனைவியான திருமதி .லட்சுமியுடன்  அதிரடியாக சிறுநீரக பையும் அகற்றபடாமல் மருத்துவமனையை விட்டு வெளியேற்றபட்ட நிலையில்,

சிலர்  ஆட்டோவிற்க்கு பணம் தந்து உதவ அந்த ஆட்டோ நண்பரோ ரத்தினபுரியில் அனாதையாக இறக்கிவிட்டு செல்ல அந்த நோயாளி மற்றும் அவரது மனைவி இருவரும் இரவு முழுவதும் கடும் குளிரில் பனியில் நடுங்கியபடி இரவை  கழித்துள்ளார்கள் .இந்த சம்பவம் கோவை மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது .


நல்லெண்ணம் கொண்ட சிலர் ஈர நெஞ்சம் அமைப்பிற்கு ( 98433 44991 ) எண்ணில் தொடர்பு கொண்டு ஈர நெஞ்சம் அமைப்பாளர் திரு .மகேந்திரன் அவர்களிடம்  விஷயத்தை தெரிவிக்க அவர் உடனடியாக திரு . தீரன் சிங்கை மீட்டு மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து மேல் சிகிச்சை மேற்கொள்ள  நடவடிக்கை மேற்கொண்டார் .

இந்த செய்தி கோவை மாலை நாளிதழ்களிலும் , தொலைகாட்சி செய்திகளிலும் வெளியானது . வலைதளங்களிலும் வெளியானது .


நன்றி : தமிழ் முரசு நாளிதழ் 








ஈர நெஞ்சம் அமைப்பிற்க்கும் ,  ஈர நெஞ்சம் அமைப்பாளர் திரு .மகேந்திரன் ,மற்றும் சம்பவ தகவல் தெரிவித்த நல்லெண்ணம் கொண்ட நண்பர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் ,வாழ்த்துக்களும் .






Nov 11, 2012

வாங்க ! தீபாவளி திரு நாள் கொண்டாடுவோம் !


வணக்கம் ,

நண்பர்களே ,எல்லோருக்கும் இனிய தீப திரு நாள் வாழ்த்துக்கள் ,தீப ஒளி போல் எல்லோர் வாழ்வும் ஒளியுடன்  இன்புற்றிருக்க இறைவனை வேண்டுகிறேன் .


நாங்க இந்த வருடம் தீபாவளி கொண்டாட ஈர நெஞ்சம் மகி அவர்களுடன் வடவள்ளியில் இயங்கும் அன்பாலயம் காப்பகத்தில் உள்ள முதியோர்கள் மற்றும் மன நலம் பாதித்த சில ஆண்கள்   குழந்தைகளுக்காக புத்தாடைகளை வழங்கினோம் .


இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ஈர நெஞ்சம் மகி ஐயா அவர்களுக்கும் , அன்பாலயம் காப்பகத்தினருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் பல .











நம் எல்லோருக்கும் உதவ நம் உறவுகள்  பலர் உள்ளனர் .ஆதரவற்றோருக்கு உதவ நாம் முன் வரவேண்டும் .நம்முடன் இந்த உலகத்தில் பிறந்த யாரும் ஆதரவற்றோர் இல்லை .

அவர்கள் சிரிப்பில் நாம் இன்பம் காண்போம் !

எல்லோர் வாழ்விலும் இருளை அகற்றி  ஒளியும் ,சிரிப்பும் காணும் ஈர நெஞ்சம் மகி அவர்கள் ,

                                       

உங்கள் சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் மகி  சார் !



Mar 11, 2011

என் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் -உங்களுடன் பகிர இதோ !!!





நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் உங்களுடன் பயணிக்க ....,,,,,,,

என் பிறந்தநாள் மார்ச் 5 ம் தேதியன்று மிக்க மகிழ்வுடன் கொண்டாடினேன் .என் பிறந்த நாள் அன்று என் அண்ணன் மற்றும் பதிவுலக நண்பர் உயர்திரு :வேலன் அவர்கள் வாழ்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி .http://vazthalamvanga.blogspot.com/2011/03/blog-post.html.என் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் சில புகைப்படங்கள் உங்களுக்காக .....,,,,,,,,,,,,,

அன்பு முதியோர் இல்லம் -கோவை



















இந்த பாட்டி 80 வயதை கடந்தும் இவர் எல்லோரையும் பராமரிக்கும் ஒரு தூணாக உள்ளார் இவர் இன்னும் 100 வயது நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் ஏனென்றால்
இவர் வாழ்ந்தால் பலர் வாழ்வர்.உங்கள் சேவை வாழ்க பாட்டி




இந்த பதிவு என் விளம்பரதிற்காகவோ ,தம்பட்டதிற்காகவோ அல்ல .பதிவை படிக்கும் நண்பர்கள் இப்படியும் நாம் வாழும் சக உலகில் மனித சமுதாயம் சந்திக்கும் அவல நிலை எடுத்துரைக்கவே .நம்மால் இயன்ற வரை நாம் சந்தோசப்படும் நாள் அவர்களுக்காக உதவலாமே .எல்லோரும் ஒரு நாள் உதவினால் அவர்களுக்கு வருடம் முழுவதும் ஒரு வேளை உணவு கிடைக்குமே .


என் பயணத்தில் உதவும் என் திருமதி.ஜமுனா , அருண் , ராம் , மற்றும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்