Showing posts with label தகவல்கள். Show all posts
Showing posts with label தகவல்கள். Show all posts

Jun 30, 2013

நீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு




உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.சதாசிவம் அய்யா அவர்களுக்கு  மக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் ,

தமிழகத்தை சேர்ந்த ஒருவர் 59 ஆண்டுகளுக்கு பிறகு உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பது குறுப்பிடத்தக்கது .இது தமிழக மக்களுக்கு பெருமையும் ,மகிழ்வையும் அளித்துள்ளது .

தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அல்டமாஸ் கபீர், வரும் ஜூலை 18ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதிலாக  புதிய தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். 

குடும்ப பின்னணி  

     நீதிபதி பி.சதாசிவம்  அவர்கள் ஈரோடு மாவட்டம், பவானி தாலுக்கா, கடப்பாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நீதிபதி சதாசிவம். 1949ம் ஆண்டு, ஏப்., 27ம் தேதி பிறந்தார். சிங்கம்பேட்டை, அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிப் படிப்பு முடித்தார். சென்னை, சட்டக் கல்லூரியில், பி.எல்., பட்டம் பெற்றார். குடும்பத்தில் முதல் பட்டதாரியான இவர், கிராமத்தில் முதலாவதாக சட்டப் படிப்பு முடித்தவர் என்ற பெருமை பெற்றவர் .


கடந்து வந்த பாதை

  சென்னை ஐகோர்ட்டில், அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு பிளீடர், சிறப்பு அரசு பிளீடராக, பதவி வகித்தார். சிவில், கிரிமினல், கம்பெனி வழக்குகளில் ஆஜராகி வந்தார். 


அரசு போக்குவரத்து கழகங்களின் சட்ட ஆலோசகராகவும், நகராட்சிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஆலோசகராகவும் பணியாற்றிள்ளார்.
சென்னை ஐகோர்ட் நீதிபதியாக, 1996ம் ஆண்டு, ஜனவரி, 8ம் தேதி, நியமிக்கப்பட்டார். 11, ஆண்டுகளுக்குப் பின், பஞ்சாப் - அரியானா ஐகோர்ட்டுக்கு, 2007ம் ஆண்டு, ஏப்ரலில், இடமாற்றம் செய்யப்பட்டார்.சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக, 2007ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார்.

                                   

சில முக்கிய தீர்ப்புகள் 

                  பல முக்கிய வழக்குகளில், நீதிபதி சதாசிவம் தீர்ப்புகள் :
  • மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், ஒருவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தும், 10 பேருக்கு, ஆயுள் தண்டனையாக குறைத்தும், தீர்ப்பளித்தார்.மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தான், ஆயுத சட்டத்தின் கீழ், பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்துக்கு, விதிக்கப்பட்ட தண்டனையை, ஐந்து ஆண்டுகளாக, குறைத்து தீர்ப்பளித்தார். 
    • டில்லியில் நடந்த, ஜெசிகா லால் கொலை வழக்கில், மனுசர்மாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, உறுதி செய்தார். 
    • பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு எதிரான, சொத்துக் குவிப்பு வழக்கில், சி.பி.ஐ.,யின், முதல் தகவல் அறிக்கையை, ரத்து செய்தார்.
    • ரிலையன்ஸ் வழக்கில், ஜனநாயகத்தில், நமது நாட்டின் சொத்துக்கள், மக்களுடையது. மக்களின் நலன்களுக்காக, அந்தச் சொத்துக்களை, அரசு பேணுகிறது என, தீர்ப்பளித்தார்.
    • பெண்கள், குழந்தைகள் தொடர்பான வழக்குகளுக்கு, முன்னுரிமை வழங்க வேண்டும் என, நீதிபதி சதாசிவம் வலியுறுத்தியுள்ளார்.
    • தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின், நிர்வாகத் தலைவர் என்கிற முறையில், பல மாநிலங்களுக்கும் சென்று, சட்டக் கல்வியறிவு முகாம்களை, கிராமப்புறப் பகுதிகளிலும், பள்ளி, கல்லூரிகளிலும் துவங்கியுள்ளார்.

பதவி காலம் 

வரும் 2014 ஏப்ரல் மாதம் 27 ம் தேதி அவர் ஓய்வு பெரும் வரை அவர்  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி  வகிப்பார்.

முயற்சி திருவினையாக்கும் 

அரசு பள்ளிகளில் படிப்பதை விட கான்வென்ட்டில் படித்தால் மட்டுமே பெரிய மனிதராக முடியும் என்ற கூற்றை மாற்றும் வகையில் படிப்பு ,கவனம் ,விடாமுயற்சி ,தன்னம்பிக்கை இருந்தால் சாதனைகள் பல செய்யலாம் என்பதற்கு இவர் சிறந்த உதாரணம் ஆவார் .சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சாதித்தது  படிப்பும் ,உழைப்பால் மட்டுமே உயர்ந்துள்ளார் .

தாயார்  நாச்சாயி அம்மாள் கூறியதாவது  :

என் மகன் சதாசிவம், சிறுவயதில் இருந்தே படிப்பில் அதிக ஆர்வம் உடையவர். பள்ளிக்கூடத்துக்கு லீவு எடுக்காமல் செல்வார். அதையே, இன்று வரை தொடர்கிறார். விவசாய குடும்பம் என்பதால், குடும்ப சூழல் காரணமாக, ஊரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் சேர்த்தோம். நாங்கள் படிக்காதவர்கள்.படிப்பின் மேல் உள்ள ஆர்வத்தால், ஆசிரியரின் மீது பெரிதும் மரியாதை கொண்டவர். மேல்நிலைப் பள்ளியின், கணித ஆசிரியர் விஸ்வநாதன் மேல் பக்தியும் ,பற்றும்  கொண்டவர். அவர், படிப்பின் மேல் வைத்த மரியாதை, இன்று பெரிய பதவிகளை கொடுத்துள்ளது. கான்வென்டில் படித்தவர்கள் தான் பெரிய பதவிக்கு வரமுடியும் என நினைத்தவர்களுக்கு  அரசு பள்ளியில் படித்தாலும், வாழ்வில் உயரலாம் என, நிரூபித்துள்ளார்.



Jan 29, 2013

யானைகள் -மனித இன மோதல்



                                    
                                                http://www.greenosai.org/

ஓசை சுற்று சூழல் அமைப்பு கடந்த ஜனவரி- 2000 வருடம் ,முதல்  உயர்திரு கே .காளிதாஸ் அவர்களின் தலைமையில் துவங்கப்பட்டு இன்று வரை 13 வருடங்களாக பல நல்ல செயல்கள் புரிந்து வருகின்றனர் .காடுகளின் பாதுகாவலனாகவும் ,வனவிலங்குகளின் நண்பர்களாகவும் ,வன விலங்குகள் ,பறவைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்பாகவும் ,மலைவாழ் மக்களின் மேம்பட்டிற்காகவும் ,பல ஆய்வுகளுக்கு மாணவர்களுக்கு உதவிகள் செய்வதுடன்   ,இன்று சுற்று சூழலினால்  அழிந்து வரும் நிலையை காக்கவும் ,பல முயற்சிகளில் வெற்றி கண்டும் ,சுற்று சூழல் பாதுகாக்க மேலும் பல  முயற்சிகள் செய்து வருகின்றனர் .

கடந்த ஞாயிறு   28/01/2013 அன்று மாலை   கோவையில் தமிழ்நாடு ஹோட்டலில் ஓசை சுற்று சூழல் அமைப்பு சார்பாக   யானைகள் மற்றும் மனித மோதல்கள் ஏன் அடிக்கடி நடக்கிறது ?,இதனை எவ்வாறு தடுப்பது ?என்பது குறித்த ஒரு கருத்தரங்கம் சிறப்பாக நடந்தது .

                              

இந்த கருத்தரங்கில் திரு.காளிதாஸ் அவர்கள் தலைமையில் " யானைகள் மற்றும் மனித மோதல்கள் " குறித்து   WWF அமைப்பின்  "துணை மேலாளர் " திரு .ஜி.சிவசுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .
                             
                              

உடன் எழுத்தாளர் திரு ,ஞானி ஐயா ,மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர் .







அழியும் காடுகள் 
  • காடுகள் பெரும்பான்மையான அளவு அழிக்கபட்டு ,நகர்புற மயமாக்கல் என்ற பெயரில் புதிய புதிய வீட்டு மனைகளும் ,சாலைகளும் ,வீடுகளும் ,தொழிற்சாலைகளும் கட்டப்பட்டு வருவதே காரணமாகும் .
           
  • புற்றீசல் போல பல கல்வி நிறுவனங்கள் மலை அடிவாரங்களை ஆக்கிரமித்து வருகின்றனர் இங்கு மலிவான விலையில் விவசாயிகளிடமிருந்தும் ,காட்டை அடுத்துள்ள நிலங்களை ஆக்கிரமித்தும் வருகின்றனர் .

  • மனதை புண்படுத்தும் விஷயம் என்னவென்றால் பாதுகாவலர்களான சில தவறான அதிகாரிகளும் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களும் ,துணை போவதே இத்தனை அவலங்களுக்கும் முக்கிய காரணமாகும் .

  • காட்டை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை  பாயும் வரை இந்த ஆக்கிரமிப்புகள் தொடரும் .

  • நாளடைவில் காட்டு விலங்குகள் அழிவதோடு மட்டும் அல்லாமல் ,வன விலங்குகள் நகர் புறம் நோக்கி நகரும் அபாயம் அதிகம் உள்ளது .

  • இந்த பிரச்சனை யை தவிர்க்க ,தடுக்க அரசு தீவிர அவசர நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் .ஒரு நிபுணர் குழு அமைக்கபட்டு ஆக்கிரமித்துள்ள காடுகளையும் ,நிலங்களையும் ,மீட்க நடவடிக்க மேற்கொள்ள வேண்டும் .

  •  யானைகள் -மனித மோதல்கள் ஏன் ?

  • மலைவாழ் மக்கள் பல வருடங்களாக காடுகளில் வசித்து வருகின்றனர் அந்த காலகட்டங்களில் யானைகள் இந்த அளவு மனிதர்களை தாக்கியதாக தெரியவில்லை காரணம் அன்று யாரும் யானைகளை துன்புறுத்தியதில்லை .மலைவாழ் மக்களுக்கும் விலங்குகள் பற்றிய அறிவு இருந்தது .

  • ஆனால் நகர்புற  மனிதனுக்கு விலங்குகள் பற்றிய அறிவு இல்லாததும் ,தீவிர பயமும் ஒரு காரணம் இவர்கள் யானைகளை தாக்குவதும் யானைகள் இவர்களை தாக்குவது இயல்பாகிவிட்டது .

  • இன்றோ  யானைகளின் இடங்களை மனிதர்கள் பிடித்ததோடு மட்டும் அல்லாமல்  யானைகளை ஆயுதங்கள் கொண்டு தாக்கியும் ,பல வகைகளில் யானைகளை துன்புறுத்துவதால் மனிதர்களை கண்டாலே துரத்துகின்றன .

  •  காடுகள் அழிக்கபடுவதால் விலங்குகளின் உணவு மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பறிக்கபடுகின்றன .ஆகவே யானைகள் உணவு,நீர் தேடி நகர்புறம் வருகின்றன .

  • யோசித்து பார்த்தால் கடந்த 5 முதல் 10 வருடங்களாக  தான் இந்த மோதல்கள் நிகழ்கின்றன .இதற்க்கு முக்கிய காரணம் காடுகளை அழித்த மனிதன் ,மனிதன், மனிதன் மட்டுமே .

  • யானைகளிடமிருந்து தப்பிக்க என்ன செய்யலாம் ?

  • மலையோர கிராம விவசாயிகள் யானைகள் விரும்பும் பயிர்களை தவிர்த்து ,அதற்க்கு பிடிக்காத பயிர் வகைகளை பயிரிடலாம் .(அப்படிப்பட்ட  அதிக லாபம் தரும் பயிர்களை பயிரிட விவசாய ஆய்வு கழகங்கள் உதவ வேண்டும் )

  • யானைகள் சுற்றி வரும் இடங்களில் மனிதர்கள் மாலை இருட்டிய பிறகும் ,அதிகாலை நேரங்களில் நடமாடுவதை  தவிர்க்க வேண்டும் .

  • யானைகளை விரட்ட வன அலுவலர்கள்  துணையுடன் தனி நபராக செல்லாமல் குழுவாக செல்லவேண்டும் .

  • யானைகள்   நீண்ட தூரம் தொடர்ந்து துரத்தாது  அதிக பட்சம் 100மீ முதல் 150 மீ வரை துரத்தலாம் .

  • யானைகளுக்கு கண் பார்வை குறைவு .மோப்ப சக்தி அதிகம் .

  • யானைகளை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்க்கலாம் .ஒரு வேளை சாலைகளில் துரத்தினால் அதன் கண்களில் படும்படி நேராக ஓடாமல் மறைவில் பதுங்கி கொள்வது நல்லது .

  • முடிவு :-

  • யானைகளுக்கு மனிதனை தாக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லை மாற்றாக அவைகள் உணவு மற்றும் குடிக்க நீர் தேடி மட்டுமே வருகின்றன .
                                

  • நாம் யானைக்கு எதிரியா ? அல்லது யானை நமக்கு எதிரியா ? என்று  பார்த்தால் காடுகளை அழித்த வகையில் நாமே அதன் எதிரிகள் .
  • ஒரு வகையில் பார்த்தால் யானைகள் இருப்பதால் தான் அதன் மீது கொண்டுள்ள பயம் காரணமாக , மேலும் காடுகள் அழிவை நோக்கி செல்லாமல் மனிதர்களிடமிருந்து  காக்கப்படுகின்றன என்பது நிதர்சனமான உண்மை .

  • இனி வரும் காலங்களில் யானைகள் மனித மோதலை தடுக்க காடுகள் காக்க  படவேண்டும் .
மேற்கண்ட தகவல்களை பகிர்ந்த ஓசை சுற்று சூழல் அமைப்பின் தலைவர் திரு.கே. காளிதாஸ்  அவர்களுக்கும் , WWF திரு .ஜி.சிவசுப்ரமணியன் அவர்களுக்கும் நன்றிகள் .

விழிப்புணர்வு கருத்தரங்கிற்க்கு அழைத்த கோவை பதிவர் சகோதரி எழில் அவர்களுக்கும்  ,முகநூல் நண்பர் திரு .சசி குமார் அவர்களுக்கும் நன்றி .