Oct 19, 2009

மீனவ நண்பர்களின் அவல நிலை



வணக்கம் ,
நமது மீனவ நண்பர்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இலங்கை கடற்படையினரால் தாக்கபடுவதும் கொல்லபடுவதும் தொடர்கதை ஆகியுள்ளது .கடந்த தீபாவளி அன்று கடலுக்குள் சென்ற நமது மீனவ நண்பர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கபட்டுள்ளனர்.இந்நிலையில் இந்தியா இலங்கை அரசுக்கு ஈழ தமிழர் பகுதிகள் மேம்படுத்தவும், ஈழ தமிழர் உதவிக்கு என்று கூறி ரூ.500 கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளது.இந்த நிதி உதவி சரியான முறையில் ஈழ தமிழர்களுக்கு சென்றடைகிறதா ?என்று ஒரு கேள்வி அடுத்து தொடர்கதையாக நடத்த பட்டு வரும் இந்த தாக்குதலுக்கு இந்திய அரசு வலுவான நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஒரு பக்கம் சீனா, ஒரு பக்கம் பாகிஸ்தான், ஒரு பக்கம் இலங்கை , இன்னொரு பக்கம் பங்களாதேஷ் ,இப்படி எல்லா பக்கமும் அடி வாங்குகிறோம் .இதற்கு பதிலாக நமது மதிப்பிற்குரிய பிரதமர் ஐயாவோ அல்லது மதிப்பிற்குரிய இந்திய பாதுகாப்பு துறை அமைச்சரோ பத்திரிகை மற்றும் தொலைகாட்சியில் "இந்தியா இதை வன்மையாக கண்டிக்கிறது இந்தியா இதை பார்த்து கொண்டு சும்மா இருக்காது "என்கின்ற அறிக்கை மட்டும் காணலாம் .இந்நிலைமை என்று மாறும் ??????????
http://www.newkerala.com/nkfullnews-1-133360.html

Apr 3, 2009

வாகன ஓட்டுனர்கள் கவனத்திற்கு


சாலையின் நிறம் சிவப்பு
பெருகி வரும் வாகனங்களும் ,ஆனால் அதை விட பெருகி வரும் வாகன விபத்துகளும் நெஞ்சில் தினம் ஈட்டி போல் பாய்கிறது .ஏன் இந்த அவசரம்,யாருக்காக அவசரம் ,அவசரத்தினால் நாம் செல்லும் இலக்கை அடைவோமா என்பது கேள்விகுறி ???? வாகன ஓட்டிகள் குறிப்பாக லாரி ,பஸ்,வேன்,ஓட்டுனர்கள் பலர் வாகனம் ஓட்டும்போது தாறுமாராக ஓட்டுகிறார்கள்.கன ரக வாகனமா அல்லது எம வாகனமா என்பது புரியவில்லை .வாகன ஒட்டுனர்களுக்கும் குடும்பம் ,மனைவி ,குழந்தைகள் ,இருப்பார்கள் அல்லவா .அவர்களும் அதே சாலையில் நடக்க கூடும் .அவர்களும் அதே விபத்து நேர வாய்ப்பு உள்ளது அல்லவா .அதை மனதில் வைத்து எதிரில் உள்ளவர்கள் நமது சகோதரர்கள் ,நமது குடும்பத்தினர் ,என்று வாகனம் ஓடினால் சாலை விபத்து குறைய வாய்ப்பு உள்ளது .
ஒட்டுனர்களுக்கு ஒரு அஜாக்கிரதை உண்டு அதாவது விபத்து நேர்ந்தாலும் ஒன்று கடுமையான சட்டங்கள் இல்லை .இரண்டு இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பிடு தொகை வழங்கி விடும் ,சட்டங்கள் மிக கடுமையாக்க படவேண்டும் .லைசென்ஸ் நிரந்தர ரத்து ,கடும் சிறை தண்டனை வழங்க படவேண்டும் .
இன்றைய காலகட்டதில் ஒருவர் வீட்டை விட்டு சென்று திரும்ப வரும் வரை உறுதி இல்லாத நிலை உள்ளது.எனவே சாலை உபயோகிப்போர் எல்லோரும் எச்சரிக்கை உணர்வுடன்,பாதுகாப்பாக உபயோகிக்கவும்.


Tamilish