Apr 3, 2011

மசினகுடி -ஒரு திகில் பயணம்



கடந்த வெள்ளி அன்று விடியலின் கொஞ்சும் உதயத்துடன் குடும்பத்தினருடன் கோவையில் இருந்து ஊட்டி மழை அன்னையின் மடியில் தவழ இரு வாகனத்தில் பயணித்தோம் .செல்லும் வழியில் மேட்டுபாளையம் சாலை புகை மண்டலத்தை பல இருமல்களை தாண்டி மழை அரசியின் பாதமான கல்லார் அடைந்தோம் .

(என் புதல்வன் அவர் மாமாவுடன் உற்சாகமாக )

சற்று நேர ஓய்வுக்கு பின் மீண்டும் எங்கள் வாகனம் எங்களை சுமந்து வேகமான மூச்சு இரைச்சலுடன் மேல் நோக்கி பயணித்தது .செல்லும் வழியில் பள்ளத்தாக்குகளை ரசித்துகொண்டே மதியம் ஊட்டி சென்றடைந்தோம் எங்கள் வருகையை வரவேற்கும் விதமாக மேகங்கள் கறுத்து மழையை எங்கள் மேல் பொழிய இடிகளால் மிரட்டிகொண்டிருந்தது.குளிருந்த காற்றும்,பனிபோலிவும் எங்கள் மேல் படர்ந்து நனைத்துகொண்டிருந்தது.


சேரிங் கிராஸ் பகுதியில் இருந்து 1 கி .மீ தூரம் பயணித்து வனத்துறை அலுவலகத்தை அடைந்தோம் .அங்கு முகம மலர்ந்த சிரிப்புடன் வனத்துறை அதிகாரி உயர்திரு .ஹாலன் அன்புடன் வரவேற்றார் .ஐயா அவர்கள் மிக்க கனிவான ,அன்பாக எங்களை உபசரித்தார் .நாங்கள் தங்க இருக்கும் மசினகுடி அபயாரண்யம் விடுதியின் ரசிதுகளை பெற்றுக்கொண்டு விடைபெற தயாரானோம் .

முக்கிய குறிப்பாக நாங்கள் மசினகுடி செல்ல இருக்கும் தலைகுந்தா ,கல்லட்டி ,பாதை மிக பயங்கரமான பள்ளத்தாக்கு என்றும் சரிவான பாதை என்றும் வாகனத்தை முதல் அல்லது இரண்டாம் கியரில் செல்ல எச்சரிக்கப்பட்டோம் .

எங்கள் வாகனங்கள் சந்தோசத்துடன் மழை சரிவை நோக்கி அதிக பட்ச எச்சரிகையுடன் மெதுவாக சரிந்துகொண்டு சென்றது .100 மீ இடைவெளியில் பல எச்சரிக்கை பலகைகள் (கவனமாக செல்லவும் ,மிக சரிவான ,ஆபத்தான பள்ளத்தாக்கு ,விபத்து பகுதி ,) என்று நம்மை எச்சரித்தன .36 ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளை தாண்டி மசினகுடி கிராமத்தை அடைந்தோம் .

மிகுந்த திகில் மற்றும் ஆபத்து எங்கள் எதிரே மசினகுடி காட்டில் ஒளிந்து காத்திருப்பது அறியாமல் நாங்கள் சந்தோசத்துடன் சிரித்துகொண்டிருந்தோம்
அப்பா நான் ரெடி

நானும் ரெடி ஜூட்

தொடரும் .....,

Mar 11, 2011

என் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் -உங்களுடன் பகிர இதோ !!!





நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் உங்களுடன் பயணிக்க ....,,,,,,,

என் பிறந்தநாள் மார்ச் 5 ம் தேதியன்று மிக்க மகிழ்வுடன் கொண்டாடினேன் .என் பிறந்த நாள் அன்று என் அண்ணன் மற்றும் பதிவுலக நண்பர் உயர்திரு :வேலன் அவர்கள் வாழ்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி .http://vazthalamvanga.blogspot.com/2011/03/blog-post.html.என் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் சில புகைப்படங்கள் உங்களுக்காக .....,,,,,,,,,,,,,

அன்பு முதியோர் இல்லம் -கோவை



















இந்த பாட்டி 80 வயதை கடந்தும் இவர் எல்லோரையும் பராமரிக்கும் ஒரு தூணாக உள்ளார் இவர் இன்னும் 100 வயது நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் ஏனென்றால்
இவர் வாழ்ந்தால் பலர் வாழ்வர்.உங்கள் சேவை வாழ்க பாட்டி




இந்த பதிவு என் விளம்பரதிற்காகவோ ,தம்பட்டதிற்காகவோ அல்ல .பதிவை படிக்கும் நண்பர்கள் இப்படியும் நாம் வாழும் சக உலகில் மனித சமுதாயம் சந்திக்கும் அவல நிலை எடுத்துரைக்கவே .நம்மால் இயன்ற வரை நாம் சந்தோசப்படும் நாள் அவர்களுக்காக உதவலாமே .எல்லோரும் ஒரு நாள் உதவினால் அவர்களுக்கு வருடம் முழுவதும் ஒரு வேளை உணவு கிடைக்குமே .


என் பயணத்தில் உதவும் என் திருமதி.ஜமுனா , அருண் , ராம் , மற்றும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்