
இன்று ஆசிரியர்கள் தினம் .எல்லா ஆசிரியர்களுக்கும் என் மனமார ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ,உங்கள் சேவை ,தியாகம் ,அர்பணிப்பு எல்லாவற்றிற்கும் தலை வணங்கி நன்றிகள் கூறிக்கொள்கிறேன் . .இவ்வுலகில் ஈடு இணையற்ற செல்வம் கல்வி செல்வம் கோடி கோடியாய் செல்வம் இருந்தும் கல்வியற்ற செல்வம் பயனற்றது .
ஆசிரியர்கள் தமது வாழ்க்கையை ஏணியாகவும்,ஒரு மெழுகுவர்தியாகவும் , ஜோதியாய் இருந்து நம் எல்லோர் வாழ்விலும் ஒளி ஏற்றுகின்றனர் .மாசற்ற ஆசிரியர்கள் தியாகம் வாழ்க !அய்யன் வள்ளுவர் வாக்கு :
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து
விளக்கம் ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
விளக்கம் எண்ணும் எழுத்தும் எனப்படும்
அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்
விளக்கம் அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள்
கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை
விளக்கம் கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை..

இத்தகைய பெருமை மிக்க ஆசிரியர் தினமானது ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நமது பாரத நாட்டின் முதல் ஜனாதிபதியும் , கல்வியின் தியாக சுடரான மறைந்த உயர்திரு Dr. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 5 ம் நாள் ஆசிரியர்கள் தினமாக கொண்டாட படுகிறது.
ஆகவே நம் பதிஉலகம்எல்லோர் சார்பில் ,முன்னால் ஜனாதிபதி உயர்திரு கல்வி செம்மல் Dr. அப்துல் கலாம் அவர்களுக்கும் எல்லா ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

