Feb 23, 2012

பங்கு வர்த்தகம்



அன்புள்ள நண்பர்களே ,

பங்கு வர்த்தகத்தில்
""பல முன்னோர்கள் கடந்து செல்லுகின்ற, சென்ற பாதையில்,
தவழுகின்ற குழந்தையாக நான் ""

பங்கு வர்த்தகம் குறித்து என்னுடைய ஆலோசனைகள் தொடர்ந்து பதிவிடலாம் என்று எண்ணம் மற்றும் இறைவன் செயல் .

தங்களது மேலான ஆதரவு தர வேண்டிகொள்கிறேன் .

நேற்றைய தினம் NIFTY(FUTURE) - 5617.55 தொடங்கியது ஆரம்பம் முதலே சந்தை கரடிகளின் கைவசம் வந்துவிட்டது .தொடர்ந்து சரிந்த நிலையில் 5518.10 -100 புள்ளிகள் சரிந்து முடிவடைந்தது .

இன்றைய

NIFTY FUTURE LEVELS
BUY ABOVE 5536 TGT-5556,5574 STAYED IN THIS LEVEL 5597,5610.. SUPP- 5490,5485..

SELL BELOW 5480 TGT- 5460,5440,5424.. RISK TRADER MAY BUY AROUND 5430 TO 5420LVL

இன்றைய company results : AVENTIS PHARMA ,RANBAXY LAB.


இன்றைய தினம் F&O expiry தினம் ஆகையால் தின வர்த்தகத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது .

disclaimer:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது .

Feb 12, 2012

மின் வெட்டு -தமிழக மக்கள் அதிர்ச்சி கோவையில் ஆர்பாட்டத்தில் தடியடி



தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின் வெட்டு தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது .கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக 10 ௦ மணி நேரம் மின்சாரம் இருப்பது இல்லை.தொழில் நகரமான கோவை மக்கள் சொல்ல முடியாது துயரமும் மன வருத்தமும் அடைத்துள்ளனர் .

பல தொழிலாளர்கள் பகல் முழுவதும் மின்சாரம் இல்லாதிருப்பதால் இரவு நேரம் பணிகள் செய்கின்றனர் .எத்தனை நாட்கள் இப்படி செய்யமுடியும் .எல்லா தொழில்களும் முடங்கி கிடக்கிறது .பெரும் பொருளாதார நஷ்டத்தை சந்தித்து வருகிறது .

சில இடங்களில் காலை வேலைகளில் மின்சாரம் இருப்பதில்லை. காலையில் சமைக்க முடியாமல் பல இல்லத்தரசிகள் அவதியடைகிறார்கள்.பள்ளி செல்லும் குழந்தைகள் உணவு எடுத்து செல்லமுடியாமலும்,மாலை வேலைகளில் படிக்க முடியாமலும் திணறுகிறார்கள் .

இப்படி எண்ணிலடங்கா பல இன்னல்கள் பலர் சந்திக்க வேண்டியுள்ளது .

தொடர் மின்வெட்டை கண்டித்து கோவையில் காந்திபுரத்தில் தொழில் கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது .ஆர்ப்பாட்டத்தில் சுமார் 10000 அதிகமான மக்கள் கூடியதால் பரபரப்பும் ,போராட்டமும் வெடித்தது .
கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர் .இதில் மக்கள் சிலர் மற்றும் பத்திரிகையாளர் சிலர் லேசான காயமடைந்ததாக தெரிகிறது .










இதற்கு முடிவு தான் என்ன ?????????????

அரசு போர் கால நடவடிக்கை எடுக்காவிட்டால் மேலும் மக்களின் எதிர்ப்பை பலமாக சந்திக்க நேரிடும் .

அரசு அவசர கால கூட்டம் கூட்டி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் .மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க படவேண்டும்

இனி மார்ச் முதல் வெயில் காலம் ஆரம்பம் என்பதால் மின்சார உபயோகம் அதிகரிக்கும் காலங்கள்
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கபட்டால் அனைத்து சிக்கல்களும் ஒரு முடிவுக்கு வரும்

தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தா விட்டால் கை தூக்கிய கொங்கு மண்டலத்தின் எதிர்ப்பை சந்திக்கவும் ,அவப்பெயர் பெறவும் நேரிடும் .

படங்கள் உதவி -தின மலர் நாளிதழ்
நன்றி