Dec 29, 2010

என் இனிய சகோதர பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்




ஒவ்வொரு வருடமும் நான் இறுதியில் என்னால் எத்தனை பேருக்கு உதவ முடிந்தது .அடுத்த வருடம் இன்னும் அதிகமானோருக்கு உதவ வேண்டும் என்றும் பிறரிடம் மனம் நோகாமல் நடந்து கொள்ளவேண்டும் என்றும் வேண்டிகொள்வேன் .

நமக்கு நாடு என்ன செய்தது என்பதை விட
நாம் நாட்டிற்கு ,பிறருக்கு எவ்வளவு உதவிகரமாக இருந்தோம் என்பது முக்கியம் .
ஒவ்வொரு நாளும் நமது வாழ்நாளில் மைனஸ் இறுதியில் நம்மோடு வருவது ஒன்றும் இல்லை வெறுமை மட்டுமே .ஆகவே பிறருக்கு நம்மால் முடித்த வரை உதவுவோம் பிறருக்கு பயனுள்ளவர்களாய் இருப்போம் .

வரும் புதிய வருடம் 2011 எல்லோருக்கும் நல்ல ஆண்டாக,
எல்லோருடைய நல்ல விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் வருடமாக ,
நாடும் ,காடும் செழித்து மும்மாரி மழைபொழிந்து,
விவசாயம் செழித்து ,உலக மக்கள் அனைவரும் இன்புற்று வாழ
மக்கள் கோபம் ,பொறமை ,வஞ்சகம் ,தவிர்த்து ஒற்றுமையுடன் நடந்து கொள்ளவும்
மனதார வேண்டிகொள்கிறேன் .

எல்லா பதி உலக நண்பர்கள் மற்றும் உலக மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Nov 9, 2010

கோவை குழந்தைகள் கொடூர கொலைகாரன் போலீசால் சுட்டு கொலை


அதர்மம் தலை தூக்கும் கடைசியில் தர்மம் வெல்லும் .

கடந்த 10 நாட்கள் முன்பு கோவையில் பள்ளி குழந்தைகளை கடத்தி கொடூரமாக கால்வாயில் வீசி கொன்ற கொலைகாரன் மோகன் ராஜ் மற்றும் மனோகர் பிடிபட்டனர் .இவர்களில் கொலைகாரன் மோகன்ராஜ் இன்று அதிகாலை என்கௌண்டேரில் சுட்டு கொல்லப்பட்டான் .

இவர்களை போன்ற குற்றவாளிகளுக்கு இதுவே சரியான தண்டனை .இந்த நாய்களுக்கு கோர்ட் ,கேஸ் ,இவர்களுக்கு 50 போலீஸ் பாதுகாப்பு ,பெட்ரோல் டீசல் செலவு, மணி அடித்தா சாப்பாடு,தங்க இடம்,இதை விட வேறு வசதி என்ன வேண்டும் .

தவறு
செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் .இவர்களை போன்ற நரகாசுரர்கள் தினம் தினம் அழிக்க பட வேண்டும் .இப்போதாவது அந்த குழந்தைகளின் ஆன்மா சிறிது சாந்தி அடையும் .இது போன்ற தண்டனை தவறு செய்ய நினைப்போருக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் .


தமிழக
காவல் துறை வாழ்க !

என்றும் தமிழக காவல் துறை சிறந்தது என்று நிரூபணம் ஆகிவிட்டது . எங்கள் மதிப்பிற்கும்,மரியாதைக்கும் உரிய ஐயா Dr.சைலேந்திர பாபு அவர்களுக்கு நன்றியும் ,நீண்ட ஆயுளுடன் மற்றும் எல்லா இன்பங்களும் பெற்று இன்புற்று வாழ இறைவன் துணை புரிவார் .மறைந்த குழந்தைகள் ஆன்மா கண்டிப்பாக உங்களை வாழ்த்தும் சந்தேகமில்லை .

ஜெய் ஹிந்த் . WE REALLY PROUD OF YOU SIR