Oct 19, 2009

மீனவ நண்பர்களின் அவல நிலை



வணக்கம் ,
நமது மீனவ நண்பர்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இலங்கை கடற்படையினரால் தாக்கபடுவதும் கொல்லபடுவதும் தொடர்கதை ஆகியுள்ளது .கடந்த தீபாவளி அன்று கடலுக்குள் சென்ற நமது மீனவ நண்பர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கபட்டுள்ளனர்.இந்நிலையில் இந்தியா இலங்கை அரசுக்கு ஈழ தமிழர் பகுதிகள் மேம்படுத்தவும், ஈழ தமிழர் உதவிக்கு என்று கூறி ரூ.500 கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளது.இந்த நிதி உதவி சரியான முறையில் ஈழ தமிழர்களுக்கு சென்றடைகிறதா ?என்று ஒரு கேள்வி அடுத்து தொடர்கதையாக நடத்த பட்டு வரும் இந்த தாக்குதலுக்கு இந்திய அரசு வலுவான நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஒரு பக்கம் சீனா, ஒரு பக்கம் பாகிஸ்தான், ஒரு பக்கம் இலங்கை , இன்னொரு பக்கம் பங்களாதேஷ் ,இப்படி எல்லா பக்கமும் அடி வாங்குகிறோம் .இதற்கு பதிலாக நமது மதிப்பிற்குரிய பிரதமர் ஐயாவோ அல்லது மதிப்பிற்குரிய இந்திய பாதுகாப்பு துறை அமைச்சரோ பத்திரிகை மற்றும் தொலைகாட்சியில் "இந்தியா இதை வன்மையாக கண்டிக்கிறது இந்தியா இதை பார்த்து கொண்டு சும்மா இருக்காது "என்கின்ற அறிக்கை மட்டும் காணலாம் .இந்நிலைமை என்று மாறும் ??????????
http://www.newkerala.com/nkfullnews-1-133360.html