May 8, 2011

இன்று அன்னையர் தினம் : வாழ்த்துக்கள்



உலகத்தில் உள்ள அனைத்து அன்னையர்க்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் .என் தாய்க்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.எல்லா அன்னையரையும் என் இரு கரம் கூப்பி நிகரில்லாத உங்களை வந்தனம் செய்கிறேன் .உலகத்தில் பெண்ணாய் பிறந்து அவள் ஒரு குழந்தையை ஈன்றெடுக்கும் போது அவள் பெரும் இன்பம் உலகத்தில் எந்த விதத்திலும் ஈடு இணை செய்ய முடியாத பேரின்பத்தை அடைகிறாள் .குழந்தை பெற்றெடுத்த நிமிடம் முதல் அன்னையின் அரவணைப்பு துவங்குகிறது .
(
சொல்லபோனால் கருவிலேயே அவள் அரவணைப்பு துவங்கி விடுகிறது ) .

பால் கொடுக்க துவங்கியது முதல் அன்னை எத்தனை விதமான பங்களிப்பை நமக்கு தருகிறாள் .தனது வாழ்கையின் சுகம், துக்கம் எல்லாமுமாக தன் குழந்தையை தான் பார்க்கிறாள் .அன்னை என்பவள் முதல் ஆசிரியராகவும் ,குருவாகவும் திகழ்கிறாள் .அன்னையை விட உற்ற தோழி இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது .
அநேகம் பேர் தன் காரியம் சாதித்து கொள்ள அன்னையின் முந்தானையை தான் முதலில் பிடித்து கெஞ்சவும், கொஞ்சவும், ஆரம்பிப்போம் சரியா .? எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும் .

நம் ஒவ்வொரு அசைவிலும் அன்னையின் பிரதிபலிப்பு இருக்கும் .நம் வாழ்வில் எது சரி? எது தவறு? என்று முடிவு செய்து நமக்கு சரியான பாதையை காட்டுகிறாள் .எதிர்பார்ப்பு இல்லாத ஒரே அன்பு அன்னையிடம் மட்டுமே பெற முடியும் .அன்னையை பாராட்ட
வார்த்தைகள் இல்லை .


தன் இளமை பருவத்தை தன் வாழ்க்கையை குழந்தைகளுக்காக தியாகம் செய்யும் தாயை வயதானவுடன் தயவு செய்து ராணி போல் பார்த்து கொள்ளாவிட்டாலும் குப்பையாய் நினைத்து அவள் மனம் நோகும்படி அவளை குப்பையில் வீசி விடாதீர்கள்.மூத்த அன்னையரின் முதியோர் இல்லங்கள் இல்லாமல் போகும் போது தா
ன் அன்னையர் தினம் முழுமையடையும் .

இன்று அன்னைக்கு எல்லோரும் அவருக்கு பிடித்த இனிப்பை வாங்கி கொடுக்கலாம் இல்லாவிட்டால் வாழ்த்தாவது கூறலாம் .அவர் அடையும் மகிழ்ச்சி பாருங்கள் .நான் என் தாயாருக்கு ஐஸ் வாங்கிகொடுத்து ஐஸ் வைத்து விட்டேன் .மகிழ்ச்சி .







7 comments:

  1. அன்னையர்தின வாழ்த்துக்கள் சார்...உங்களைப்போல உங்கள் மகனும் அவரின தாய்க்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தாரா?அன்னையர்தினத்திறகு மட்டும் இல்லாமல் அடிக்கடி ஐஸ்கிரீம் நிறைய வாங்குங்கள். அப்போதுதான் ஐஸ்கடை காரர்களும் மனம் சந்தோஷமடைவார்கள்..அவர்கள் சார்பாகவும் வாழ்க வளமுடன்....
    வேலன்.

    ReplyDelete
  2. வேலன் அண்ணா ,
    வணக்கம் .என் மகன் தன தாய்க்கு வாழ்த்துக்கள் கூறினான் .அன்னையர் தினத்தில் பல ஐஸ் கடைகாரர்களும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் என்று என்னும் போது இரட்டை மகிழ்ச்சி .தொடர்ந்து ஐஸ் சாப்பிட ஆசை தான் எனக்கு டாக்டர் யாரும் நட்பு இல்லையே
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  3. Hi,

    Good. Add quotes in your summary which is suitable for this day. All the best. Keep it up.

    Still & Ever
    Mahesh

    ReplyDelete
  4. அன்புள்ள மகேஷ் அண்ணா ,
    வணக்கம் ,தாங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .தொடர்ந்து தாங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் .
    அன்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  5. வணக்கம் கீதா மேடம் ,
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ,தொடர் வருகை தாருங்கள் ,
    நட்புடன் ,
    கோவை சக்தி.

    ReplyDelete
  6. தன் இளமை பருவத்தை தன் வாழ்க்கையை குழந்தைகளுக்காக தியாகம் செய்யும் தாயை வயதானவுடன் தயவு செய்து ராணி போல் பார்த்து கொள்ளாவிட்டாலும் குப்பையாய் நினைத்து அவள் மனம் நோகும்படி அவளை குப்பையில் வீசி விடாதீர்கள்.மூத்த அன்னையரின் முதியோர் இல்லங்கள் இல்லாமல் போகும் போது தான் அன்னையர் தினம் முழுமையடையும் .

    ReplyDelete
  7. mama super. u write more than about mother

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்