Dec 29, 2010

என் இனிய சகோதர பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்




ஒவ்வொரு வருடமும் நான் இறுதியில் என்னால் எத்தனை பேருக்கு உதவ முடிந்தது .அடுத்த வருடம் இன்னும் அதிகமானோருக்கு உதவ வேண்டும் என்றும் பிறரிடம் மனம் நோகாமல் நடந்து கொள்ளவேண்டும் என்றும் வேண்டிகொள்வேன் .

நமக்கு நாடு என்ன செய்தது என்பதை விட
நாம் நாட்டிற்கு ,பிறருக்கு எவ்வளவு உதவிகரமாக இருந்தோம் என்பது முக்கியம் .
ஒவ்வொரு நாளும் நமது வாழ்நாளில் மைனஸ் இறுதியில் நம்மோடு வருவது ஒன்றும் இல்லை வெறுமை மட்டுமே .ஆகவே பிறருக்கு நம்மால் முடித்த வரை உதவுவோம் பிறருக்கு பயனுள்ளவர்களாய் இருப்போம் .

வரும் புதிய வருடம் 2011 எல்லோருக்கும் நல்ல ஆண்டாக,
எல்லோருடைய நல்ல விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் வருடமாக ,
நாடும் ,காடும் செழித்து மும்மாரி மழைபொழிந்து,
விவசாயம் செழித்து ,உலக மக்கள் அனைவரும் இன்புற்று வாழ
மக்கள் கோபம் ,பொறமை ,வஞ்சகம் ,தவிர்த்து ஒற்றுமையுடன் நடந்து கொள்ளவும்
மனதார வேண்டிகொள்கிறேன் .

எல்லா பதி உலக நண்பர்கள் மற்றும் உலக மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்