
ஒவ்வொரு வருடமும் நான் இறுதியில் என்னால் எத்தனை பேருக்கு உதவ முடிந்தது .அடுத்த வருடம் இன்னும் அதிகமானோருக்கு உதவ வேண்டும் என்றும் பிறரிடம் மனம் நோகாமல் நடந்து கொள்ளவேண்டும் என்றும் வேண்டிகொள்வேன் .
நமக்கு நாடு என்ன செய்தது என்பதை விட
நாம் நாட்டிற்கு ,பிறருக்கு எவ்வளவு உதவிகரமாக இருந்தோம் என்பது முக்கியம் .
ஒவ்வொரு நாளும் நமது வாழ்நாளில் மைனஸ் இறுதியில் நம்மோடு வருவது ஒன்றும் இல்லை வெறுமை மட்டுமே .ஆகவே பிறருக்கு நம்மால் முடித்த வரை உதவுவோம் பிறருக்கு பயனுள்ளவர்களாய் இருப்போம் .
வரும் புதிய வருடம் 2011 எல்லோருக்கும் நல்ல ஆண்டாக,
எல்லோருடைய நல்ல விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் வருடமாக ,
நாடும் ,காடும் செழித்து மும்மாரி மழைபொழிந்து,
விவசாயம் செழித்து ,உலக மக்கள் அனைவரும் இன்புற்று வாழ
மக்கள் கோபம் ,பொறமை ,வஞ்சகம் ,தவிர்த்து ஒற்றுமையுடன் நடந்து கொள்ளவும்
மனதார வேண்டிகொள்கிறேன் .