
சமையல் எரிவாயு உபயோகிப்போர் மறு சிலிண்டர் பதிவு செய்ய பல மணி நேரம் போராட வேண்டிவருகிறது தொலைபேசியில் அழைத்தால் எப்போதும் என்கேஜ் டோன் வரும் .நேரில் சென்றால் கால் கடுக்க காத்திருந்து பதிவு செய்யவேண்டும் . இப்போது அந்த தொல்லைகளில் இருந்து விடுதலை விடுதலை.
அரசு புதிய முறையாக தொலைபேசியில் பதிவு செய்யும் முறை அறிமுகபடுத்தி உள்ளது .IVRS (INTERACTIVE VOICE RESPONSE SYSTEM )என்ற முறை அறிமுகபடுத்தி உள்ளது.
முதல் முறையாக சென்னையில் மார்ச் மாதமும்,இன்று முதல் கோவையிலும் அமுலுக்கு வருகிறது .கோவையில் உள்ள 4 லட்சம் பயனாளிகள் பயன்பெறலாம் .கோவையில் இன்று மாவட்ட ஆட்சி தலைவர் இந்த சேவையை துவக்கி வைத்தார் .
81240-24365 என்ற எண்ணுக்கு எந்த தொலை பேசியிலிருந்தும் எந்த நேரமும் ,விடுமுறை நாட்களிலும் பதிவு செய்யலாம் .முதல் முறை நமது எரிவாயு எண் மற்றும் நமது தொலை பேசி எண் பதிவு செய்துவிட்டால் .அடுத்த முறை ""REFILL "" என்று டைப் செய்து மேற்கண்ட எண்ணுக்கு SMS அனுப்பினால் போதும் பதில் SMS -ல் நமது வரிசை பதிவு எண வரும் .
மேலும் விவரங்கள் அறிய 2247396 ,2242696 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் . எல்லோரும் இந்த சேவையை பயன்படுத்திகொள்ளவும் .