Nov 2, 2010

கோவையில் பயங்கரம் குழந்தைகள் கொடூர கொலை

கோவையில் பயங்கரமான கோரமான மோசமான சம்பவம் அரங்கேறி உள்ளது .கோவை டவுனில் துணிக்கடை நடத்தி வருபவரின் மகள் முஸ்கின் (5 ம் வகுப்பு ,வயது 11 ) மற்றும் மகன் ரித்திக் (3 ம் வகுப்பு ,வயது 8 ) இருவரும் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள் .இவர்கள் பள்ளிக்கு தனியார் ஆம்னி வாகனத்தில் பள்ளிக்கு செல்கிறார்கள் சம்பவதன்று ஆக்டிங் டிரைவராக செயல்பட்ட மோகன்ராஜ் என்பவன் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதாக கூறி பொள்ளாச்சி சென்று உள்ளான்.அங்கு தன் நண்பனான மற்றொரு கால் டாக்ஸி டிரைவர் மனோகர் என்பவனையும் அழைத்துகொண்டு குழந்தைகளின் பெற்றோரிடம் பணம் பறிக்கும் எண்ணத்துடன் சென்றுள்ளனர் .
சிறுமியை தனியாக பார்த்த மோகன்ராஜ் காமம் தலைக்கு ஏறி சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்ய தொடங்கி உள்ளான் .இதை பார்த்த சிறுவன் ,சிறுமி கத்த சிறுவனின் கை ,கால் கட்டி பின் சீட்டின் கீழ் அமுத்திவிட்டு சிறுமியை துன்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளான் .உடந்தையாக டிரைவர் மனோகர் செயல்பட்டுள்ளான் .
ஒரு சமயத்தில் தாங்கள் சிக்கிவிடுவோமோ என்று யோசித்து இருவரையும் கொல்ல முடிவெடுத்து திருமூர்த்தி மலைக்கு மலை மீதிருந்து தள்ளிவிடும் எண்ணத்தில் அழைத்து சென்றுள்ளனர்.
செல்லும் வழியில் பிஞ்சு கால்கள் வலித்து அழுததால் அத்திட்டத்தை கைவிட்டு கீழே அழைத்து வந்துள்ளனர் கொலைபாதகர்கள்.
பின்னர் அடுத்து உள்ள பி.கே .பி கால்வாய்க்கு அழைத்து வந்து அடுத்த திட்டமான பாலில் சாணி பவுடர் கலக்கி வாயில் ஊற்றி உள்ளனர் கசப்பாக இருந்ததால் துப்பி அழுததால் அத்திட்டத்தை கைவிட்டு முகத்தில் பிளாஸ்டிக் பை கட்டி கொலை முயற்சித்துள்ளனர் குழந்தைகள் மூச்சு திணறி கத்தியதால் பயந்து அத்திட்டத்தையும் கைவிட்டு உள்ளனர் .பிறகு டிரைவர்கள் இருவரும் ரகசியமாக பேசிக்கொண்டு இருகுழந்தைகளையும் மிரட்டி சாப்பிட வற்புறுத்தி சாப்பிட வைத்துள்ளனர்
அருகில் ஓடிய கால்வாயில் கை கழுவ கூறியுள்ளனர் பயந்த சிறுமி மறுத்து உள்ளால் "நாங்கள் ஒன்றும் தண்ணீரில் தள்ளிவிட மாட்டோம் உன் தம்பி கழுவிவிட்டு வரட்டும் என்று சிறுவனை அனுப்பிஉள்ளனர்.சிறுவன் திரும்பிவந்ததால் சிறுமி தன் தம்பியை துணைக்கு அழைத்துக்கொண்டு கால்வாயில் கை கழுவ சென்றுள்ளனர் கொலைபாதகர்கள் இருவரையும் இதுதான் சமயமென்று தண்ணீரில் தள்ளி விட்டனர் .தண்ணீரில் தத்தளித்தபடியே உயிர் நீத்து காலத்தின் பிடியில் சிக்கி தண்ணீரின் போக்கிற்கு அடித்து செல்லப்பட்டனர் .கொலையாளிகளுக்கு மனதில் சிறு ஈரம் கூட இருந்திருக்காதா ?
உயர்திரு காவல் துறை ஆணையர் திரு Dr.c.சைலேந்திரபாபு அவர்களின் தீவிர முயற்சியால் இருவரின் சடலங்களையும் மீட்டு கொலையாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இச்சம்பவம் சினிமாவை மிஞ்சும் சம்பவமாக நடந்துள்ளது இவ்வளவு ஒரு கேவலமான சம்பவங்களுக்கு விடை சொல்வது யார் ?

திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு வேண்டுகோள் !
இது போன்ற சம்பவங்கள் "அஞ்சாதே'" மற்றும் சில திரைப்படத்திலும் "ஆசை" படத்தில் பிளாஸ்டிக் கவர் கொலை முயற்சி போன்ற சம்பவங்கள் திரை காட்சிகளாக வந்துள்ளன.இதை போன்ற வன்முறை தூண்டும் சினிமாக்களை பார்பவர்கள் சில சந்தர்பங்களில் இப்படிப்பட்ட யோசனைகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக உள்ளன.
திரைப்படங்கள் சமுதாயத்தை மேம்படுத்தும் எண்ணத்துடன் திரைப்படங்கள் தயாரிக்க படவேண்டும் .தயாரிப்பாளர்களின் சுய லாபத்திற்காக இது போன்ற காமம் மற்றும் கொலை செய்ய வழி சொல்லி கொடுக்கும் திரைப்படங்கள் தவிர்க்க படவேண்டும் .

சட்டங்கள் கடுமையாக்கல்
சமீப காலத்தில் பணத்திற்காக குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் கும்பல் அதிகமாகிவிட்டது .இது போன்ற குற்றங்களுக்கு காரணம் நம் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் " எப்படியும் சிக்கினால் எதாவது ஒரு வழியில் வெளியே வந்துவிடலாம் " எனும் எண்ணம் மற்றும் மீறிபோனால் ஆயுள் தண்டனை என்ற தைரியம் .ஒரு குற்றத்திற்கு வழக்கு என்ற பெயரில் காலங்கள் வருட கணக்கில் நீண்டு செல்தல் .
சவூதி போன்ற முஸ்லிம் நாடுகளில் உள்ளது போன்ற கடுமையான பொதுமக்கள் மத்தியில் "கல்லால் அடித்து கொள்தல் ,சிரசேதம் ,கை கால் வெட்டுதல் " போன்ற கடுமையான பயத்தை உண்டு பண்ணும் தண்டனைகளும் மரண தண்டனைகள் கொண்டுவரப்படவேண்டும் .
மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்
குறிப்பாக பணத்திற்காகவோ, பகை தீர்க்கவோ,அப்பாவி பள்ளி குழந்தைகளை கடத்தி கொலை செய்தால் மரண தண்டனை மட்டுமே என்ற அவசர சட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் .

வழக்கறிஞர் நண்பர்களுக்கு வேண்டுகோள்
டிரைவர்கள் மோகன்ராஜ் மற்றும் மனோகர் போன்ற மனதில் ஈரமற்ற பள்ளி குழந்தைகளை கடத்தி கொலை செய்யும் கொலைபாதக செயலில் ஈடுபடும் நபர்களுக்கு எக்காரணம் கொண்டும் வழக்கில் ஆஜராக கூடாது .நாளை நம் பிள்ளைகளும் பழி தீர்க்கவோ,பணம் பறிக்கவோ , இதே நிலைமைக்கு ஆளாக நேரலாம் .
காவல் துறைக்கு வேண்டுகோள்
  • எல்லா தனியார் வாகனத்திலும் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் முடிந்தால் வி.ஐ.பி .வாகனம் தவிர மற்ற எல்லா வாகனத்திலும் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்
  • ஒவ்வொரு தனியார் வாகனங்களிலும் GPRS மூலம் வண்டி எங்கு சென்றுகொண்டிருகிறது என்பதை கண்காணிக்கும் கருவிகளை அவசியம் பொறுத்த வேண்டும் .
  • பள்ளி நுழை வாசல்களில் கண்காணிப்பு கேமரா அவசியம் பொருத்தப்படவேண்டும் அதன் மூலம் யார் அழைத்து செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க முடியும் .
  • ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குள்ளும் உள்ள தனியார் ஓட்டுனர் புகைப்படத்துடன் கூடிய விவர குறிப்பேடு பெற்றிருக்க வேண்டும் .அதில் பழைய குற்றவாளிகள் இருந்தால் அவர்கள் மீது தொடர் கண்காணிப்பு இருக்க வேண்டும் .
  • பள்ளி வாகனங்களில் அதிவேக தடை கருவிகள் பொறுத்த செய்யவேண்டும்
  • சோதனை சாவடிகள் அதிக படுத்தப்பட வேண்டும் குறிப்பாக புற காவல் சோதனைசாவடிகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் பணியமர்த்த படவேண்டும் .இரவு நேரம் மட்டுமன்றி பகல் நேரங்களிலும் திடிர் வாகன சோதனைகள் செய்ய வேண்டும் .பகல் வாகன சோதனைகள் நடப்பதே இல்லை
  • போக்குவரத்து ரோந்து வாகனங்கள் ,இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிக படுத்த படவேண்டும் .
  • எல்லா பள்ளிகளிலும் குழந்தை கடத்தல் பற்றி குழந்தைகளுக்கு பயபடாமல் சமயோசிதமாக செயல்பட ஆலோசனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் .
  • எல்லா பள்ளிகளிலும் கட்டாய அவசிய தற்காப்பு கலை போதிக்க அறிவுறுத்த படவேண்டும்
கண்ணீர் அஞ்சலி
உயிர் நீத்த குழந்தைகளுக்கு பதிவர்கள் மற்றும் இப்பதிவை படிக்கும் எல்லா வாசகர்கள் சார்பாகவும் குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டலாம் .
குழந்தைகளை பிரிந்து துயரால் வாடும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மன தைரியம் உண்டாகட்டும் .

தகவல் மற்று படங்கள் உதவி தின மலர் நாளிதழ் : நன்றி








கொலையாளி மனோகர்


12 comments:

  1. I really wish those two animals are killed in Jail by some "humans" or during the trial.
    What is that Father waiting for?

    ReplyDelete
  2. உயிர் நீத்த குழந்தைகளுக்கு பதிவர்கள் சார்பாக குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டலாம் .
    குழந்தைகளை பிரிந்து துயரால் வாடும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மன தைரியம் உண்டாகட்டும்

    வேலன்.

    ReplyDelete
  3. வாங்க வேலன் சார் வணக்கம் ,
    கோவையில் ஜாதி ,இனம் ,மதம்,கட்சி , எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு மனித நேயம் என்பது எல்லா தரப்பு மக்களிடமும் உள்ளது என்பது தெரிந்துகொள்ள முடிந்தது .சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரகணக்கில் எல்லோரும் கண்ணீருடன் கலந்துகொண்டனர் .2 நாட்களாக கோவை மக்கள் எல்லோர் மனமும் கனத்து உள்ளது .
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  4. Anonymous வாங்க .
    கண்டிப்பாக அவர்கள் கடுமையாக தண்டிக்க படுவார்கள் .அந்த குழந்தைகளின் கண்ணீரும் உயிர் நீத்த வேதனைக்கும் கண்டிப்பாக அவர்கள் தண்டனை முன் உதாரனமாக இருக்கும் .கோவை காவல் துறை ஆணையர் மதிப்பிற்குரிய Dr.c.சைலேந்திரபாபு தண்டனை கடுமையாக வாங்கி கொடுக்க தனி கவனம் செலுத்திவருகிறார் .சிறையில் சக கைதிகளும் அவனை அடிக்க முயற்சித்துள்ளனர் என்பது செய்தி .
    அன்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  5. உயிரை உறைய செய்கிறது இந்த செய்தி . எப்படித்தான் இது போன்ற செயல்களில் இரங்கி எதுவும் அறியாத குழந்தைகளை கொல்லும் எண்ணம் இது போன்ற மனித அரக்கர்களுக்கு வருகிறது !. இறைவனடி சேர்ந்த அந்த குழந்தைகளுக்காக நானும் எனது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன் . பகிர்வுக்கு நன்றி தோழரே

    ReplyDelete
  6. அட பாவிகளே! அந்தப் பெற்றோரைச் சாகும் வரை துன்பத்தில் தள்ளிவிட்டீர்களே! கொடுமை
    ஏன் இவர்கள் மனம் இப்படி? ஆகிறதோ? சட்டங்களை இறுக்குங்கள். இவர்களுக்குக் கிடைக்கும்
    தண்டனை பாடமாக இருக்கட்டும். இந்தண்டனையை ஊடகங்கள் வாயிலாகப் பரப்புங்கள்.
    இப்படியான நினைப்பு இருப்பவர்களுக்கு இவர்கள் தண்டனை அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  7. தங்கள் வரவு நல்வரவாகுக சங்கர் சார் ,
    உயிரை உறைய செய்கிற செய்தி மட்டுமல்ல சார் .நாங்கள் எல்லோரும் உண்மையாக சொல்ல போனால் நடை பிணமாகிவிட்டோம்.கண்டிப்பாக நம்மை போன்ற பதிவர்கள் இணைந்து குரல் கொடுப்போம் . மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்
    விரைவில் குறிப்பாக பணத்திற்காகவோ, பகை தீர்க்கவோ,அப்பாவி பள்ளி குழந்தைகளை கடத்தி கொலை செய்தால் மரண தண்டனை மட்டுமே என்ற அவசர சட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் .
    இச்சட்ட நிறைவேற்றலுக்கு பாடுபடுவோம் .
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  8. அன்புள்ள ஜோகன் சார் ,
    தாங்கள் Paris, France நாட்டினர் என்பதில் சந்தோசம் தங்கள் வருகைக்கு நன்றி .இது போன்ற கடத்தல்காரர்களுக்கு
    "" இப்படியான நினைப்பு இருப்பவர்களுக்கு இவர்கள் தண்டனை அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்.""
    நீங்கள் கூறுவது உண்மை .
    அச்சத்தை ஏற்படுத்தும் மரண தண்டனை மட்டுமே ஒரே தீர்வு .
    தாங்கள் நாட்டில் இது போன்ற குற்றங்களுக்கு என்ன தண்டனை ?
    குற்றவாளிகளுக்கு விசாரணை மற்றும் கோர்ட் நடவடிக்கைகள் விரைவில் முடிக்க படுமா ?

    பாரத நாட்டில் இவர்களை போன்ற காம வெறி பிடித்த கயவர்களை களையெடுக்க வேண்டும் .
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  9. //விரைவில் குறிப்பாக பணத்திற்காகவோ, பகை தீர்க்கவோ,அப்பாவி பள்ளி குழந்தைகளை கடத்தி கொலை செய்தால் மரண தண்டனை மட்டுமே என்ற அவசர சட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் .
    இச்சட்ட நிறைவேற்றலுக்கு பாடுபடுவோம் .//
    +1

    ReplyDelete
  10. அன்புள்ள சுரேஷ் ,
    இந்த அவசர சட்ட நிறைவேற்றல் தொடர்பாக உங்கள் நண்பர்களுடனும் ஆலோசித்து அரசுக்கு தெரியபடுத்தி கடிதங்கள் எழுதவும் .
    நட்புடன் ,
    கோவைசக்தி

    ReplyDelete
  11. Good Sakthi Anna,

    For the first time, I just saw your blog. Nice..anna..All your suggestions given to avoid these types of incidents are really good but the only thing is that it has to be brought into immediate practice. The more the strictness brought, the strangers will fear to do these type of heartless murders. Good Going anna...Write more social awareness articles..

    Karthick Raja
    Sathy, Erode district
    karthickrajadr@gmail.com

    ReplyDelete
  12. அன்புள்ள கார்த்திக் ,
    வாங்க heartless murders கு என்ன தண்டனை குடுகுராங்கனு பாக்கலாம் .கொஞ்ச நாள்ல எல்லோரும் இந்த விசயத்தை மறக்காமல் இருந்தால் சரி .ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் மத்திய அரசு பாலியல் மற்றும் பள்ளி குழந்தைகள் கடத்தல் கொலைகள் தொடர்பாக அவசர சட்டம் விரைவில் அமுலாக்க உள்ளது .நற்செய்தி .தொடர்ந்து பதிவுகளை படிக்கவும் தங்கள் எண்ணங்களை வெளிபடுத்தவும் .
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்